Wednesday, November 19, 2008

நகைச்சுவை

நான் ரசித்த சிரிப்புகளை நம்ம மக்களும் படித்து மகிழ இந்த பதிவு.

அம்மா ஒரு பையன்கிட்ட மாவு அரைக்க சொன்னாங்க. ஆனா அவன் பதுங்கி, பதுங்கி போனான். ஏன் தெரியுமா?
ஏன்னா அவன் அம்மா, மாவை நைசா அரைக்க சொன்னாங்க அதான்.



இரண்டு பாகிஸ்தானியும், இரு இந்தியனும் கிரிக்கெட் மேட்ச் பார்க்க சென்றார்கள். புகைவண்டியில் பயணம் செய்வதற்கு பாகிஸ்தானியர்கள் இரு பயணச் சீட்டு வாங்கினார்கள். ஆனால் நம்ம ஆட்கள் ஒரு பயணச் சீட்டு வாங்கினார்கள். அப்போது பாகிஸ்தானி எப்படி?? என்றான்.
அதற்கு நம்ம ஆள் பொருத்திருந்து பார் என்றான்.
புகைவண்டியில் ஏறியவுடன் நம்ம ஆட்கள் டாய்லட்டுக்குள் புகுந்து கொண்டனர். பயண பரிசோதகர் கதவை தட்டி கேட்டவுடன், கையை மட்டும் நீட்டி பயண சீட்டை காட்டினான். அவர் சரி என்று சென்று விட்டார். விளையாட்டு முடிந்து வரும்போது பாகிஸ்தானியர்கள் ஒரு சீட்டு வாங்கினார்கள். ஆனல் நம்ம ஆட்கள் பயணச்சீட்டே வாங்க வில்லை. அப்போது பாகிஸ்தானி எப்படி?? என்றான், அதற்கு நம்ம ஆள் பொருத்திருந்து பார் என்றான்.
புகைவண்டி வந்தவுடன் பாகிஸ்தானியர்கள் இருவரும் டாய்லட்டுக்குள் புகுந்து கொண்டனர். நம்ம ஆட்களும் வேரொரு டாய்லெட்டுக்குள் புகுந்து கொண்டனர். சிறிது நேரம் கழித்து நம்ம ஆள் ஒருத்தன் மட்டும் வெளியில் வந்து, பாகிஸ்தானியர்கள் இருந்த டாய்லேட் கதவை தட்டி Ticket Please.... என்றார். உடனே அவன் கையை நீட்டி பயணச் சீட்டை காட்டினான். உடனே நம்ம ஆள் அந்த சீட்டை வாங்கி, எடுத்து வட்டு வந்து அவன் டாய்லெட்டுகுள் புகுந்துக் கொண்டான்.