Sunday, February 10, 2008

பூனை குறுக்கே வந்தால் சகுனமா?

நம்ம ஆட்கள்கிட்ட இருந்த ஒரு கெட்ட பழக்கம் மூடபழக்க வழக்கம். பூனை குறுக்க போக கூடாது, விதவைங்க எதிர்க்க போககூடாது, அதே மாதிரி ஒத்த பிராமணன் எதிர்க்க வந்தா சகுனம் சரியில்லன்னு சொல்லுவாங்க. இப்ப அந்த மாதிரி இல்லாவிட்டாலும்., அரசல் புரசலா அங்கொண்றும், எங்கொண்றுமா பேசிகிட்டுத்தான் இருக்காங்க. நம்ம பெரியவங்க சொன்ன ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் இருக்கும். ஆனா அது அப்படியே மருவி உண்மையான காரணமே மறைந்து போய் விட்டது. சமீபத்தில படிச்சத உங்கள் இடமும் பகிர்ந்து கொள்ளலாம் என்றுதான் இந்த பதிவு.

வெளியில போறப்ப பூனை குறுக்கே போனா சகுனம் சரியில்ல, கொஞ்ச நேரம் காத்திருந்து விட்டு செல்லுனும்னு சொல்வாங்க. அதனுடைய உண்மையான காரணம் என்னான்ன, அந்த காலத்திலெல்லாம் ஒரு ஊரிலிருந்து இன்னோரு ஊருக்கு போக நீண்ட தூரம் காட்டு வழியா பிராயாணம் பண்ணனும். சிருத்த, காட்டுபூனை, புலி போன்ற மிருகங்கள் இருக்கும். நாம காட்டு வழியா நடந்து போகுபோது, ரொம்ப தூரத்தில அது குறுக்காக போனா உடனே கொஞ்ச நேரம் நிக்கணும். எனென்றால் இந்த காட்டுபூனை, சிருத்த, புலி எல்லாத்திற்கும் ஒரு குணம் உண்டு. இந்தபக்கத்திலிருந்து அந்த பக்கம் போன உடனே போகாம கொஞ்சம் நேரம காத்திருக்குமாம், ஏதும் இரை கிடைக்குமா என்று. அதனால்தான் நம்ம பெரியங்க இந்த மாதிரி சொல்லிருக்கங்க. அது அப்பிடியே மருவி போய் இப்படி ஆகி விட்டது. ஆனா ஒத்த பிராமணன் எதிர்க்க வந்தா சகுனம் சரியில்லன்னு, ஏன் சொன்னாங்கன்னு சத்தியாமா எனக்கு தெரியாதுங்க. யாரவது தெரிஞ்சா சொல்லுங்க.

No comments: