Thursday, February 14, 2008

காதலர் தினம்

ஒரு ஊரில் கணவனும், மனைவியும் இருந்தார்கள். அவர்கள் மாட மாளிகை, கோட கோபரத்தில் மிக வசதியாக இல்லாவிட்டாலும் சந்தோசமாக வாழ்ந்தார்கள். இப்படி சந்தோசமாக வாழ்ந்தாலும் அவரகள் இருவர் மனதிலும் அடிக்கடி சிறிது வருத்தம் இழையோடும். அவனுக்கோ தன் மனைவியின் அழகான மனைவியின் கூந்தலுக்கு ஒரு குஞ்சம் வாங்கி கொடுக்க முடியவில்லையே என்று. அவளுக்கோ தன் கணவனின் அறுந்து போன கைக்கடிகாரத்திற்கு ஒரு வார் பட்டை வாங்கி கொடுக்க முடியவில்லையே என்று. வருத்திலும் ஒரு ஒற்றுமை அவர்களிடம். இப்படி இருக்கும்போது காதலர் தினம் வந்தது. சரி அவளுக்கு இந்த வருடமாவது ஆச்சிரியம்படும் வகையில் ஒரு பரிசு கொடுக்கலாம் என்று திட்டமிட்டான். காதலர் தினமும் வந்தது. ஆனால் கையில் பணமில்லை. என்ன செய்வது என்று திட்டமிட்ட படியே காலையிலெ வேளைக்கு சென்றவன் விட்டு இரவு வீட்டுக்கு திரும்பினான். மனைவின் நினைவும் அவ்வறே இருந்தது. அவன் மனைவிடம் சென்று வாழ்த்து சொல்லி பரிசை கொடுத்தான். அவளும் தன் ஒரு பரிசை அவனுக்கு கொடுத்தாள். இருவரும் பரிசை பிரித்தார்கள், பிரித்தவுடன் இருவர் கண்களிலும் கண்ணீர்.குஞ்சமும், கடிகார வார்பட்டையும் பரிசாக இருந்தன். இதிலும் ஒற்றுமையை பாருங்கள், அவள் தன் கூந்தலை விற்று தன் கணவனுக்கு வார்பட்டையும், அவன் தன் கடிகாரத்தை விற்று அவளுக்கு குஞ்சமும் வாங்கியிருந்தார்கள்.

என்னடா எல்லோரும் காதலர் தினம், காதலர் தினம் அப்படின்னு எழுதிகிட்டு இருக்காங்க, நம்ம பங்க்குக்கு நாமலும் கடிப்போம்னு எப்பவோ படிச்சத ஞாபகப் படுத்தி எழுதியிருக்கேன். வலிச்சா மன்னிக்கவும். இதவிட ஒரு காமெடி என்னான என் நண்பன்ட்ட காண்பிச்சு எப்பிடிட இருக்குன்னென். அவன் சொன்னான் கதை நல்லாத்தான் இருக்கு, ஆனா கடைசியில அவங்க அழுவுராங்கலே எதுக்கு தெரியுமான்னு கேட்டான். எதோ புதுமைய்ய சொல்லுவான்னு என்னடான்னேன். அந்த பொருளை ரெண்டு பேருமே பயன் படுத்த முடியலயேனு தான் அழுவராங்க அப்படின்னான்

3 comments:

Anonymous said...

ஏன்யா உனக்கு இந்த எழவெல்லாம்....கதை,கிதைன்னு

மங்களூர் சிவா said...

இத நான் 4ம் வகுப்பு படிக்கிறப்ப பாடத்திலயே படிச்சிருக்கேனே :((

இக்பால் said...

அதெல்லாம் ரகசியம் ஐயா. ஷ்ஷ்....