கடந்த 2004ஆம் வருடம் டிசம்பர் மாதம் 26ஆம் தேதி நடந்த சோக நிகழ்சியை யாரும் மறந்திருக்கமாட்டீர்கள். அத்துர்சம்பவத்தில் இறந்தவர்களின் ஆத்ம சாந்திர்காக என் மலையாள நண்பர் திரு.அகஸ்டின் பெட்டேயல் அவர்கள் மலையாலத்தில் எழுதிய இக்கவிதயை தமிழில் மொழி பெயர்த்து காணிக்கையாக்குறேன்.
காணாமல் இருந்து நான்
கண்டது என் விழிகள்
என்னையறியாமல்
என் இமைகள் நனைந்தன
நான் பார்க்காத ஏதோ உலகம்போல
அறியாத ஒரு நிசப்தம்
கனத்த பயமுடன்
உலகத்தை விழுங்கவரும்
காலனைப் போல்
நான் கண்டேன் கடலின் அலைகளை
அம்பெய்தபோல் மிக வேகமாக
வந்ததே சுனாமி!
என் கடற்தாயே!
மாரில் மிதித்து எம்மக்களை
ஆழியில் அமிழ்த்தினாயே
உன் சக்தியை மக்கள் அறிவாரோ?
நீ எங்கள் எமன்னானது
வாழ்வில் மறக்க முடியாதது
காலன் சுனாமியே!!
என் வாழ்வில் என்று நினைத்தாலும்
என் விழிகள் நனையும்,
பூக்களாய் சொறியும்
இறந்தவர்களின்
ஆத்ம சாந்திர்க்காக....
இக்கவிதயை படித்தபின் இவர்களுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுதுவீர்களாக.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment